2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இறைவரி திணைக்கள தரவு அழிப்பு: பல்கலை அறிக்கை பெற விரும்பும் பொலிஸார்

Super User   / 2012 நவம்பர் 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

184 மில்லியன் ரூபா மோசடி தொடர்பான வழக்கில் இறைவரி திணைக்களத்தின் தரவு பதிவுகளை அழித்தவர்களை இணங்கான கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து அறிக்கைகளை பெற விரும்புவதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

தமது கட்சிக்காரர்கள் மீதான குற்றச்சாட்டு, பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் செய்யப்பட்டது என்பதால் அது வலுவற்றது எனவும் இவர்கள் மீது கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டியிருக்கலாம் எனவும் முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த விவாதத்தை கருத்திலெடுத்த கொழும்பு நீதவான் கனிஷ்க விஜேயரத்ன, சந்தேக நபர்களை நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X