2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதி மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 22 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(என்.பரமேஸ்வரன், கே.என்.முனாஷா)

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக நேற்று புதன்கிழமை பிற்பகல் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சிலாபத்தைச் சேர்ந்த என்டனி ஜோசப் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .