2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பு மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 நவம்பர் 26 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


நீர்கொழும்பு மாநகர சபையினால் தமது பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒவிட்டியாவத்தை பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது பிரதேசத்தில் குப்பை கொட்டுவதனால் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புக்குகளிற்கு நீர்கொழும்பு மேயர் நடவடிக்கை எடுக்காமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொச்சிக்கடை, ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பேரணியாக நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியை வந்தடைந்ததுடன் நிறைவடைந்தது.

பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியை பல்லன்சேனை சுற்றாடல் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .