2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெடிமருந்துகளுடன் சீன பிரஜை கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 27 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சீன பிரஜை ஒருவரை கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மீன்பிடிப் படகுடனையே இவர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரிஷியஸ் நாட்டுக்குச் சொந்தமான இந்தப் படகை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதிலிருந்து எம் - 16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களையும் அதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .