2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பரிந்துரைகள் சிவில் சமூகத்திற்குள் கொண்டு செல்லவும்: பாக்கியஜோதி சரவணமுத்து

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இக்பால் அலி)

எமது நாட்டின் எதிர்காலம்  குறித்து ஜெனீவா பரிந்துரைகள் பற்றி சிவில் சமூகத்திற்கு மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்று மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கு செயலமர்வு லக்ஷ்மன் விக்கரமசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய  நாடுகள்  மனித உரிமைக் கூட்டத் தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தீர்மானங்களை அமுல்படுத்தக் கோரி சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்திருந்தது. ஆனால் ஒரு வருடகாலமான போதும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது பொருத்தமானது அல்ல.  ஜனாதிபதி இதனை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்திருந்த போதிலும் நாடாளுமன்றம் பெரிதாக கவனத்திற் கொண்டாகத் தெரியவில்லை இந்தப் பரிந்துரைகள் பற்றி பொது மக்களுக்கு பெரியளவில் தெளிவு இ;ல்;லை.

இந்தக் கருத்துப் பரிமாறல்களை  வெளியே கொண்டு செல்வதற்கு ஊடகச் சுதந்திரம் ஒன்று இல்லை.  சிவில் சமூகத்தின் பிரச்சினை சிவில் சமுகத்திற்கு எடுத்துச் சொல்ல முடியாத நிலை உள்ளது. மனித நேயப் பண்பாட்டை வெகுஜன ஊடகள் மூலம்தான்  முன்வைக்க முடியும்.

தற்போது மாகாண சபையின் அதிகாரம் படிப்படியாக செத்துக் கொண்டு போகிறது. 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் ஒழிக்கப்பட வேண்டும் என இலங்கையின் அரசியல் சக்திகள் வலியுறுத்திவருகின்றனர்.

திவி நெகும சட்டத்தின் மூலம் தகவல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியாது உள்ளது.

இலங்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் சிங்களம் அல்லது தழிழில் இல்லாத ஒரு நிலை இன்று வரை இருக்கிறது. புரிந்துரைகள் மொழிபெயர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. அங்கிருந்து இன்னும் வரவில்லை.

உண்மை, நீதி நியாயம், மனித உரிமைகளைப் பேணுதல் என்பன இந்நாட்டில் நிலைநாட்டப்படல் வேண்டும். இதற்காக சிவில் சமூகத்தில் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இப்பரிந்துரைகள் குறித்து நாடு பூராகவும் விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர், அளவ்வ மற்றும் மாவத்தகம எதிர்கட்சி உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .