2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பில் கடுமையான தீக்காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, தூவன – கோங்காக முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரே  (வயது 21)  இவ்வாறு உயிரிழந்தவராவார். 

இச்சம்பவம் தொடர்பில் உறவினர்கள் தெரிவிக்கையில்,

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டுக்கு சாம்பிராணி போடுவதற்காக இப்பெண் சிரட்டைக்கு பெற்றோலை ஊற்றி தீ மூட்டியுள்ளார். இதன்போது இவர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளான நிலையில், கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையிலேயே இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .