2025 ஜூன் 23, திங்கட்கிழமை

போதை மருந்து விற்பனை செய்த வைத்தியருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 22 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. என்.முனாஷா

நீர்கொழும்பு, அக்கரபனக பிரதேசத்திலுள்ள தனது மருந்தகத்தில் போதை மருந்து பொருள் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைத்தியரை பெப்ரவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு, அக்கரபனக பிரதேசத்தைச் சேர்ந்த ரத்னாயக்க முதியான்சலாகே அஜித் விபுல பண்டார என்பவரே பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

 'மக்கள் மருந்தகம்' என்ற பெயரில் இயங்கி வந்த போதைப்பொருள் விற்பனை நிலையம் கடந்த சனிக்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது, பிரதான சந்தேக நபரான வைத்தியர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்படார்.

இந்த மருந்தகத்தில் போதைப்பொருளுக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் சூடோல் உட்பட போதை மாத்திரைகள் இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

போதை மாத்திரைகள் வாங்குவது போன்று சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அனுப்பி நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.

இச்சுற்றிவளைப்பின் போது போதை மருந்துப் பொருளுக்கு மேலதிகமாக கருச்சிதைவுக்கு பயன்படுத்தப்படு;ம் மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .