2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நெசவுத் துறையில் வேலை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


1980, 1981, 1982ஆம் ஆண்டுகளில் தனியார் துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நெசவு கைத்தொழில் துறையில் பணியாற்ற முடியாமல் வேலையிழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டத்தினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

1960 - 70ஆம் ஆண்டு காலப்பகுதி இத்துறையில் மிகவும் முக்கியத்துமிக்கதாகும். அதன் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடைமுறையினால் இத்துறையானது பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

அதனால் இந்த துறையில் பணியாற்றிய ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. அன்றைய அரசாங்கம் தமது கட்டுப்பாட்டில் இருந்த இத்திணைக்களத்தினை தனியார் துறைக்கு வழங்கியதால், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக  பணியாற்றி ஊழியர்கள் ஓய்வூதியத்துக்குள் உள்வாங்கப்பட்டதுடன் ஏனைய ஊழியர்கள் தொழிலை இழக்க நேரிட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிறகு மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கினங்க பணியிழந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வகையில் மொத்தம் 3,605 பேருக்கும் அதில் மரணமான 196 பேரின் குடும்பத்திற்கும் இந்த நஷ்டயீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. முதற் கட்ட கொடுப்பனவு மார்ச் மாதம் 13ஆம் திகதிக்கு முன்னா் வழங்கப்படும் என கை்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு வைபவரீதியாக இந்த கொடுப்பனவுகள் அமைச்சின்  கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர்களான அதாவுட செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .