2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மொரட்டுவை நகரசபை வளாகத்தில் பதற்றம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை நகரசபை வளாகத்தில் இன்று காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட மொரட்டுவை பிரதி மேயர் சுஜித் புஷ்பகுமாரவை நகரசபைக்குள் செல்லவிடாது, பொதுமக்கள் மற்றும் பிக்குமார்கள் அப்பகுதியை முற்றுகையிட்டதை அடுத்தே இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துவரப்பட்ட பிரதி மேயர், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை வாகனத்திலிருந்து இறங்க முடியாது காணப்பட்டதை அடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் சென்றனர்.

எகொடஉயன சுனந்தோபனந்தாராம விகாரையின் விகாராதிபதி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்ற குற்றச்சாட்டில் மேற்படி பிரதி மேயர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .