2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வடக்கும்- தெற்கும் சந்திக்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு, இந்நாட்டு மக்களுக்கு தரும் படிப்பினைகளின் பின்னணியில் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களின் மனசாட்சிகள் உரையாடும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் 16ஆம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி விடுமுறை தினத்தன்று காலை 9.30 மணிக்கு, ஜமமு தலைவர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு ஏற்பாடு செய்துள்ள மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கான இந்த அஞ்சலி மற்றும் உரை நிகழ்வில், சிங்கள பௌத்த மக்களின் ராஜகுருவாக கருதப்படும் கோட்டே  ரஜமகா விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரரும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், இந்நாட்டு இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சருமான பி.பி.தேவராஜும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சாந்தி சச்சிதானந்தமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .