2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

திங்கட்கிழமை மாலை ஜனநாயக இளைஞர் இணைய கொழும்பு மாவட்ட கிளை அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தின் கொழும்பு மாவட்ட கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வு,  திங்கட்கிழமை, பௌர்ணமி தினம், 16ஆம் திகதி, பிற்பகல் 3 மணிக்கு, இலக்கம் 168, ஸ்ரீ கதிரேசன் வீதி, புறக்கோட்டை, கொழும்பு 13 என்ற முகவரியில் அமைந்துள்ள விஸ்வகர்மா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் நிரோஷ் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சிங்கள-தமிழ் மக்களின் அபிலாஷைகள் பரஸ்பரம் எடுத்து கூறப்படவேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் கொள்கையின் அடிப்படையில் ஏற்பாடாகியுள்ள, பயன்தரும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு ஜமமுவின் கொழும்பு மாவட்ட செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜ.ம.மு.வின் உப செயலாளர் சண்.குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, மகளிர் இணைய செயலாளர் நந்தினி விஜயரத்தினம் ஆகியோர் செய்துவருகின்றனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X