2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இ-அரசாங்க கொள்கையை மாற்றியமைக்க நடவடிக்கை

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு இ-அரசாங்க கொள்கையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டினை இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்கான விசேட செயலமர்வொன்று இக்டாவின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றது.

'நல்லாட்சிக்கான இ-அரசாங்கம்' என்ற கருப்பொருளையும் 'நல்லாட்சியின் மூலம் மிகச் சிறந்த இ-அரசாங்கமாக இருத்தல்' என்ற தரிசனத்தையும் கொண்ட இந்த செயலமர்வில் அரச திணைக்கள தலைவர்கள், பிரதான புத்தாக்கல் அலுவலர்கள், கல்விமான்கள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் ஏனைய நிறுவனப் பிரதிநிதிகள் இப் பட்டறையில் பங்குபற்றினர்.

இதன்போது புதிய இ-அரசாங்கம் கொள்கை - பின்னணி மற்றும் அறிமுகம், இ-அரசாங்கம் கொள்கை – தரிசனம் மற்றும் கண்ணோட்டம், விமர்சன முறை – அறிமுகம் ஆகிய விடயங்கள் பற்றி விரிவுரைகள் வழங்கப்பட்டன.

விரிவுரைகளின் பின்னர் பங்குபற்றுநர்கள் குழுக்கள்களாகப் பிரிந்து புதிய கொள்கையின் வாக்கியங்களை அவதானத்தில் கொணடு அவற்றின் தெளிவுத்தன்மை, விடயசார்பு மற்றும் அமுல்செய்யக்கூடியதன்மை ஆகியவை தொட்பாக அவற்றை மதிப்பிட்டனர்.

இ-அரசாங்கம் கொள்கையை மிகவும் சிறப்பாக புதுப்படுததுவதற்கு ஏதுவாகக்கூடிய உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றன. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் http://egovpolicyen.engage.icta.lk/என்ற இணையத்தளத்தின் ஊடாக கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும்.

இ-அரசாங்க கொள்கை 2009 டிசெம்பர் 16ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றது. இந்த கொள்கையினை 2012 வரை அமுல்படுத்தப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .