2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐ.ம.சு.கூ உறுப்பினர் மு.காவில் இணைவு

Super User   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் பைசான் நைசர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நேற்று இணைந்துகொண்டுள்ளார்.

மேல் மாகாண சபை தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்துள்ளார். இந்த இணைவினை அடுத்து பேருவளை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தர்கா நகரைச் சேர்ந்த இவர் மேல் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவிலும் இவர் கைச்சாத்திட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .