2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு நகைக்கடை கொள்ளை; மேலுமொருவர் கைது

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நகைகடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று முகவர் நிலையத்தில் துப்பாக்கி முனையில் இரண்டு கோடிக்கு ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கெசீனா என்பவரே பெரும் கைது செய்யப்பட்டுள்ளவராவார். சந்தேகநபரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காலி நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீர்;கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும், நீர்;கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மேல் மாகாண சபையின் கம்பாஹா மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பொர்னாந்து கடந்த சனிக்கிழமை (22) காக்லை கைது செய்யப்பட்டார்.இவர் தற்போது மூன்று மாத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, பெரியமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் இர்சாத் மற்றும் கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்து சாமதின் கொஸ்தா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ள ஏனைய இரு சந்தேகநபர்களுமாவர். இவர்கள் இருவரும் ஒண்க் வகுப்பில் கல்வி கற்ற நண்பர்களாவர்.

கடந்த 17ஆம் திகதி பிற்பகல் 1.35 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

கொள்ளைச் சம்பவம்  இடம்பெற்ற அன்று (17) குறித்த வர்த்தக நிலையத்தில்  வியாபார நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டிருந்த போது, ஹெல்மட் மற்றும் ஜாக்கட் அணிந்த இரண்டு பேர்  கடையில் நுழைந்து நகை கடையின் காவலாளியை  முதலில் தாக்கியுள்ளனர்.

பின்னர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரையும் கடையிலிருந்தவர்களையும் ஒருவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்த மற்றையவர் பணத்தை கொள்ளையிட்டனர். அதன் பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .