2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ள விஜித்தவுக்கு சிகிச்சை

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜகான்


நீர்கொழும்பில் அமைந்துள்ள நகைக்கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின்  நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து நீதிமன்ற அனுமதியின் பேரில்; சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (16)  முற்பகல் அழைத்துவரப்பட்டார்.

சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட ரொயிஸ் விஜித்த பெர்னாந்து வைத்தியசாலையின் சிகிச்சை பெற்ற பின்னர் சிறைச்சாலை வாகனத்தில் மீண்டும் அழைத்துச்  செல்லப்பட்டார்.

கடந்த 11ஆம் திகதி நீர்கொழும்பு  நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, சிறைச்சாலை வைத்தியர் நீதிமன்றில் ஆஜராகி, ரொயிஸ் விஜித்த பெர்னாந்து சளி, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

இதனை கருத்தில் எடுத்த நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே, ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு உரிய சிக்கிச்சை வழங்குவதற்கு அனுமதியளித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி   நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக்கடை மற்றும்  வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில், ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வரால்; ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட மேலும் மூவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .