2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரபல திருடன் 'நாகயா' கைது

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட். ஷாஜஹான்


பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரபல திருடனான 'நாகயா' கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீரகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(20) தெரிவித்தனர்.

சந்தன ராகபோதியா என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். நாகய்யா என்று அழைக்கப்படும் இவரை சனிக்கிழமை(20) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய பணம், மடிக் கணினி, ஐபேட், செல்லிடத் தொலைபேசிகள்  கெமரா மறறும் கத்தி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் பமுனுகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஆறு வீடுகளில் திருடியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இவர் குற்றச் செயலுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே  விடுதலையாகி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணாந்து  ஆகியோரின் ஆலோசனையின் பேரில்;, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சமன்திலக்கவின் உத்தரவின் கீழ்  செயற்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரை மன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .