2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அதிகரித்த வரிப்பணத்தொகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 ஜூலை 23 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு நகர வரிப்பணம் செலுத்துவோர் சங்கம் புதன்கிழமை (23) முற்பகல், நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தின் பிரதான வாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

மாநகர சiபியனால் விதிக்கப்பட்டுள்ள அதிகரித்த வரிப்பணத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 2013ஆம் ஆண்டு அறவிட்ட அதே வரிப்பணத் தொகையை 2014ஆம் ஆண்டுக்கான வரியாக அறவிடுமாறும் மேலும் சில கோரிக்கைகளை விடுத்தும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கெனவே இது தொடர்பாக தம்மால் முடிந்தளவு மேயருடனும் மாநகர சபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதி மேயர் நீர்கொழும்பு நகர வரி செலுத்துவோர் சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார்.

இருந்தும் இவ்வார்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரும் நீர்கொழும்பு நகர வரிபணம் செலுத்துவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநகர சபையின் ஆணையாளர் என்.பி.கருணாரத்ன மற்றும் நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் ஆகியோரை மாநகர சபை மண்டபத்தில் அமைந்துள்ள காரியாலயங்களில் சந்திந்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.

நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் 2014ஆம் ஆண்டில் 400 முதல் 1000 வீதம் வரை அதிகரித்த வரி அறவிடப்படுவதாகவும், இது தொடர்பாக மாநகர மேயருடன் கலந்துரையாடப்பட்ட போது, அதிகரித்த வரிக் கட்டணத்தை குறைப்பதற்கு மேயரால் முடியவில்லை எனவும், அத்துடன் மாநகர சபையில் அதற்கான தீர்மானம் எடுக்கப்படவுமில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னரே இவ்வார்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் கொழும்பு உட்பட ஏனைய உள்ளூராட்சி சபைகளில் அறவிடும் தொகையை விட மிக அதிகமான கட்டணம் நீர்கொழும்பு மாநகர சபை அறவிடுவதாக அங்கு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டுக்கான முழு வருட வரிக்கட்டணத்தோடு ஒப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய வரிக்கட்டணத்தில் மூன்று மாதம் கொண்ட ஒரு தவணைகான கட்டணம் மிக அதிகமாகும். இதன் காரணமாக நகர மக்கள் அதிகரித்த வரிக்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் நீர்கொழும்பு நகர  வரிப்பணம் செலுத்துவோர் சங்கம் மாநகர சபையின் ஆணையாளர் என்.பி.கருணாரத்ன, நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ் எம்.சகாவுல்லாஹ் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.

அக்கடிதத்தில் இவ்வருடம் முதல் வீடுகளுக்கு அறவிடும் 8 வீத வரிக்கட்டணத்தை 2 வீதமாகவும், வியாபார நிலையங்களுக்கு அறவிடும் வரிக்கட்டணத்தை 14 வீதத்திலிருந்து 8 வீதமாகவும் குறைப்பதற்கு மாநகர சபையில் பிரேரணை கொண்டு வருமாறு, மக்கள் வாக்குளால் தெரிவு செய்யப்பட்டுள்ள மாநகர மேயரிடமும் உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது நீர்கொழும்பு நகர வரிப்பணம் செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அருள் ராஜ், செயலாளர் எம்.ஜே. செல்டன் பெர்னாந்து,  பொருளாளர் என்க்லீட்டர்ஸ் சில்வா, தொடர்புச் செயலாளர் நிஹால் பெர்னாந்து , சட்ட ஆலோசகர் சட்டத்தரண்p கே.ஜி.குணதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .