2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்சென்ற லொறி சாரதி கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மஹவௌ நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவரையும் இன்று திங்கட்கிழமை (18) மோதிவிட்டுத் தப்பிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் மோதுண்ட இரு பொலிஸாரும் தற்போது மாராவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  மாராவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்களாவர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வீதிச் சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த இவ்விரு பொலிஸாரும் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக பயணித்த கண்டர் ரக வாகன லொறியினை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

எனினும் குறித்த லொறி பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாது அவ்விருவரையும் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இவ்வாறு தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றிலும் மோதிவிட்டே தப்பிச் சென்றுள்ளது.

தப்பிச் சென்ற லொறியினை சிலாபம் கொழும்பு வீதியில் கொஸ்வாடி பிரதேசத்தில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த மாராவில பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் இடைமறித்து சாரதியைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாராவில பொலிஸார்   மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .