2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மென்பானம் ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்தது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


யாழுக்கு மென்பான போத்தல்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நீர்கொழும்பு, சிலாபம் பிரதான வீதியின் குரணை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (21) காலை குடை சாய்ந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கனரக வாகனத்தின் ஒரு பக்க டயர் கழன்றமையினால்     வாகனம் கட்டுப்பட்டை இழந்து குடை சாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கொண்டு செல்லப்பட்ட அனைத்து மென்பான போத்தல்களும் வீதியில் சிதறி கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில், மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .