2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மனோ, பிரபாவின் தாயார் மறைவுக்கு இ.தொ.கா. அனுதாபம்

George   / 2014 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான அமரர் வி.பி.கணேசனின் மனைவியான திருமதி டயானா ரூத் கணேசனின் மறைவு மலையக மக்களுக்கு பெரும் இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும், கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் ஆகியோர் கூட்டாக விடுத்த அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

இ.தொ.காவின் அனுதாகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமரர் டயானா ரூத் கணேசன் மலையக பெருந்தோட்டத்துறை பெண்களின் உயர்வுக்கும், நலனுக்காகவும் அவரது கணவர் வி.பி.கணேசனுடன் இணைந்து ஆற்றிய சேவை, மலையக தொழிற்சங்க வரலாற்றில் மறக்கப்பட முடியாததாகும்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் ஒரு காலத்தில் இணைந்து செயலாற்றிய அமரர் வி.பி.கணேசன் இ.தொ.காவுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலங்களில் டயானா ரூத் கணேசன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் ஏ.அஸீஸ், அமரர் வி.பி.கணேசன் ஆகியோரோடு இவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்வுகளில் பெண்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் தம்மை ஈடுபடுத்தியதை ஒருபோதும் மறக்க முடியாது.

அன்னாரது பிரிவால் துயருறும் அவரது புதல்வர்களான ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன், பிரதி அமைச்சர் பிரபா கணேசன் உட்பட குடும்ப உறவினர்களின் துயரத்தில் தாமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சகல அங்கத்தினர்களும் இணைந்து அன்னாரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  தனது அனுதாப செய்தியில்  மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .