2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாநகரசபை உறுப்பினர் நியமனத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது: ரவிகுமார்

George   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர உறுப்புரிமையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு, தியாகராஜா நிரோசன் என்பவரை நியமித்ததன் மூலம் மத்திய கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, பாரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சர் பிரபா கணேசனின் செயலாளரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,

மத்திய கொழும்பில் போட்டியிட்ட லோரன்ஸ் சந்தனப்பிச்சை பெர்ணான்டோ  அவர்களின் ராஜினாமாவின் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே நிரோஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதில் எமக்கும் மகிழ்ச்சி தான். ஏற்கனவே இக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாகிய வடக்கைச் சார்ந்த சண்.குகவரதன், சி.பாஸ்கரா, பெரியவர் வேலணை வேணியன் ஆகியோர் உள்ளனர்.

ஆனாலும் மத்திய கொழும்பில் வசிக்கும் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் லோரன்ஸ் சந்தனப்பிச்சை பெர்ணான்டோ நகரசபைக்கு சென்றார். நிரோஷனை நியமித்ததன் மூலம் ஜிந்துப்பிட்டி, ஜம்பட்டா வீதி, கொச்சிக்கடை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிரோஷனின் நியமனத்தின் மூலம் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது தான் பிரச்சினையாக இருக்கிறது.

இந்த நியமனம் என்பது உள்கட்சி விவகாரமாக இருந்தாலும் நானும் ஒரு மாநகரசபை உறுப்பினராக இருந்தவன் என்பதினால் இதிலுள்ள பாரதூரம் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும் என்பதால் தான் இதில் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அறிக்கைகள் வந்தாலும் உண்மையை வாக்களித்த மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமானதாகும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .