2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய பிராந்தியத்துக்கான உள்ளூராட்சி மாநாடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான உள்ளூராட்சி மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் கால்ரைட் தலைமையில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது.

இம்மாநாட்டில், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டார்.

இதேவேளை, பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, மாலைதீவு, இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் உள்ளுராட்சி துறைசார்ந்த அமைச்சர்களும், அமைச்சுகளினது செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டின்போது பொதுநலவாய நாடுகளின் உள்ளுராட்சித் துறையின் செயலாளர் நாயகம் கால்ரைட் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .