A.P.Mathan / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மு.கா. செயலாளர் நாயகமும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரான நாட்டு நிலைமைகள் குறித்து அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட மு.கா. பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
அதேவேளை நல்லாட்சிக்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் ஹக்கீமின் வேண்டுதலின் பேரில் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகம் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கு விளக்கிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நிஷா பிஸ்வால், இத்திட்டங்கள் நாட்டு மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் இலங்கையின் நல்லாட்சிக்கும் பொது நல விடயங்களுக்கும் அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிபிட்டார்.

5 minute ago
30 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
36 minute ago
52 minute ago