Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படாத வகையிலேயே தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி.ராம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிதன் பின்னர் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும். தொகுதிவாரி தேர்தல்முறைமை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்ற அதேநேரம் மறுபுறத்தில் விருப்பு வாக்குமுறைமை நீக்கப்பட்டு விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் விகிதாசார, தொகுதிவாரி ஆகிய இரண்டு முறைகளும் உள்வாங்க்கப்பட்ட கலப்பு தேர்தல் முறைமையொன்று நடைமுப்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதென்றாலோ அல்லது புதிய தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதென்றாலோ அது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் பாதிக்காதவகையிலேயே அமையவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேடியாக கோரிக்கை விடுத்துள்ளேன்.
அதேநேரம் விகிதாசார தேர்தல் முறைமையானது அதிசிறந்த ஜனநாயகத் தன்மை கொண்டதாக காணப்படுகின்றபோதும் விருப்பு வாக்கு முறையால் அதன் உச்சபட்ச நன்மையை அடைய முடியாத நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, விருப்பு வாக்கு முறைமை தொடர்பாக கவனம் செலுத்தி விகிதாசார தேர்தல் முறைமை திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பின்பற்றுவது சகல தரப்பினருக்கும் பொருத்தமானதாக இருக்கும் என்பதையும் அவரிடம் எடுத்துரைத்தேன்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றுமு; மலையகம் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிப்படையாது நியாயமானதாக கிடைக்கவேண்டும். அப்பிரதேசங்கள் தவிர்ந்து நாட்டில் ஏனைய பிரதேசங்களில் பரந்து வாழும் சிறுபான்மை மக்களினதும் பிரதிநிதித்துவங்கள் உரியமுறையில் கிடைக்கவேண்டும். அதேபோன்று இறுதியாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசன மதீப்பீட்டுக்கு அமைவாக தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் சதவீதத்துக்கு அமைவாக அவர்களின் பிரதிநிதித்துவங்கள் அங்கிகரிக்கப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டேன்.
மேலும், புதிய தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் எல்லை நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு பூரண ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அம்முறைமையை அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கவேண்டும். அதன் பின்னரே அம்முறைமை அரசியல்யாப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
இவ்விடயங்களை கூர்மையாக உள்வாங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டதுடன் எந்வொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை, சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை பாதிக்காத வகையிலேயே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என உறுதியாக குறிப்பிட்டார். மேலும் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடானது ஜனநாயக விரோத செயற்படாகும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் துணைபோகாது எனவும் குறிப்பிட்டார் என்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025