2025 ஜூன் 23, திங்கட்கிழமை

25 கிலோகிராம் வெள்ளை சந்தனத்துடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 28 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

அனுமதிப்பத்திரமின்றி 25 கிலோகிராம் வெள்ளை சந்தனத்துடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையை நீர்கொழும்பு பதில் நீதவான் ஜே.எம். ஜயசுந்தர எதிர்வரும 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.

குறித்த பாகிஸ்தான் பிரஜை நீர்கொழும்பு, ஏத்துக்கால பிரதேசத்தில் வைத்து இன்று நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் வெள்ளை சந்தனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர் பாகிஸ்தான், கராச்சி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .