2025 மே 07, புதன்கிழமை

அதிகாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - அளவெட்டி மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள், இன்று (28) அதிகாலை புகுந்த வாள் வெட்டுக்குழு, வீட்டில் இருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

அத்துடன், அக்குழுவினர் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X