2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘அறிமுகமற்றவர் தொடர்பில் அறிவிக்கவும்’

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதியமுகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

“அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரை யார் என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 இற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள்” என்றும் அவர் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததாவது,

“கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கைப்பையுடனேயே வருகை தந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான பொதிகள், பெட்டிகளைக் கண்டவுடன் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும்.

எந்த நேரத்திலும் துரிதமாகச் செயற்பட பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .