Freelancer / 2022 மார்ச் 12 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாணம் - உரும்பிராயில் இடம்பெற்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றது.
நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்பட பல்வேறு செயல்களுக்கு காரணமாக அமைந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குறித்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
குறித்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். (R)
41 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
19 Mar 2026