2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

உள்ளக விளையாட்டு அரங்கு திறப்பு விழா

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கு, நவம்பர் 19ஆம் திகதியன்று திறந்து வைக்கப்படவுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய, மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்தத் திறப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு, சர்வதேசத் தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 208 மில்லியன் ரூபாய் செலவில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .