2025 மே 03, சனிக்கிழமை

கோடரி வெட்டில் முடிந்த குடும்ப தகராறு

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இளவாலை - உயரப்புலம் பகுதியில், நேற்று (26) இரவு, குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய அளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையிலேயே, கோடாரி வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X