Janu / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூர்த்தி உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு , வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் புதன்கிழமை ( 06) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் , ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் பயணிக்கும் முதியவர்களை மறித்து , தன்னை சமூர்த்தி உத்தியோகஸ்தராக அறிமுக்கப்படுத்திக்கொண்டு , உதவி திட்டங்கள் வழங்க உள்ளதாக அவர்களுக்கு பேச்சை கொடுத்து , சந்தர்ப்பம் பார்த்து , அவர்களின் நகைகள் உள்ளிட்ட உடமைகளை வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார்.
இவ்வாறாக நான்கு சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட 10 பவுண் நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எம்.றொசாந்த்
36 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
4 hours ago