Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார்
அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (07) மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
'இரணைமடு குளத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்வதற்காகவே, அடுத்த வருட சிறுபோகத்தை சிறுத்தவேண்டியுள்ளது. அத்தோடு பயிர்ச்செய்கை நிறுத்தப்படுகின்ற போது, பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.
வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்ப்பாடுகளை தமது திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாக பிரதம நீர்ப்பாசன பொறியியளாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025