2025 மே 05, திங்கட்கிழமை

தடை கோரிய மனுக்களை மீளப் பெற்ற பொலிஸார்

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை, மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன.

இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ், இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன.

எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் ஒவ்வொருவர் உள்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, திங்கட்கிழமை (23) வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (23) இந்த விண்ணப்பங்கள் மீளவும் பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து விண்ணப்பங்களை மீளப்பெறுவதாக, பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X