Editorial / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்
தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம், வவுனியாவில் இன்று (28) திறப்பு வைக்கப்பட்டது.
இந்த அலுவலகம், முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், சிறீதரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான ரவீகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் குறித்த அலுவலகம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
19 Mar 2026