2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாகத்துக்கு மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாகத்தில் சோடா என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவன் நேற்று (09) வீட்டில் இருந்த போது, தாகமாக இருக்கின்றது என சோடா போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த மண்ணெண்ணெயை சோடா என கருதி குடித்துள்ளான்.

அதனை அடுத்து சிறுவனை வீட்டார் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிறுவன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .