2025 மே 03, சனிக்கிழமை

தாக்குதலில் வயோதிப தம்பதிகள் காயம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

மிருசுவில் - தவசிக்குளம்  பகுதியில், நேற்று  (26) இரவு,  வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில், 69 வயதான கணவனும் 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.

அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X