Editorial / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி, வவுனியாவின் பல்வேறு இடங்களில் கையெழுத்துப் போராட்டம், இன்றும் (28) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்ப்பாட்டில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், காலை 8.30 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியிலும் பின்னர் இலுப்பையடி உட்பட நகரின் சில பகுதிகள் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.ஶ்ரீதரன், எம்.எ. சுமந்திரன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், வாலிபர் முண்ணனி தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago