Niroshini / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
நல்லூர் கந்தசுவாமி கோவிலில், 'பிலவ' வருட ஸ்கந்தஷ்ஷ்டி உற்சவம், எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சுகாதார துறையினரது அறுவுறுத்தலின் படி, பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தால், உற்சவத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை கோவில் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் நேரலையை ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகையால், ஸ்கந்தஷ்ஷ்டி உற்சவ காலத்தில் உற்சவ நேரங்களின் போது நாட்டின் தற்போதைய சுகாதார நடைமுறைகளின் படி, பக்தர்கள் கோவிலிலும் வெளிவளாகத்திலும் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டு, உற்சவ நேரங்களின் போது கோவிலுக்கு வருவதைத் தவிர்த்து, வீடுகளில் இருந்து தூர தரிசனம் செய்யுமாறு, தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago