2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன், எம். றொசாந்த், டி. விஜித்தா

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்றுக் காலை 9 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சுகிர்தன், ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபைத் தலைவர் மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .