2025 மே 05, திங்கட்கிழமை

பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு கொரோனா

Niroshini   / 2021 மே 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிசு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட  என்ரிஜன் பரிசோதனையின் மூலம், சிசுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளத.

சிசு, தற்பொழுது வைத்திய நிபுணர்களின் விசேட கண்காணிப்பின் கீழ்  பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தாய்க்கும் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X