2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புதிய தளபதி – மாவட்ட செயலாளர் சந்திப்பு

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - பலாலி கட்டளைத் தலைமையகத்துக்குட்ட இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் பிறேமலால், யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, மாவட்டச் செயலாகத்தில், இன்று (05) நடைபெற்றது.

இதன்போது, யாழ்.மாவட்டத்தில்   இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேவைகள், சமூக நலத் திட்டங்கள் தொடர்பாகவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலைமையை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு எதிர்நோக்குவது, சமூகத் தொற்று ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .