Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள், தம்மை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளதால் சமூகத்தில் தமது குடும்பங்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்து விசாரணையை துரிதப்படுத்துமாறு நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இவ்வழக்கு பாரதூரமான வழக்கு. ஆகையால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீங்கள் தற்போது சந்தேக நபர்கள். குற்றவாளிகளா? இல்லையா? என்பதை விசாரணைகளின் முடிவில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் கூறினார்.
புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago