Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
உயிரிழந்த மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு, இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்தன பரணவிதான ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை வழங்கினார்கள்.
இதன்போது, ஊடக அமைப்புக்களுக்கு இலங்கையின் ஊடக அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள், ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான சந்திப்பும்இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் யாழ். மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து நடத்திய ஊடகவியலாளர் செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (26) இரவு, கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க சான்றிதழ்களை வழங்கினார்.

4 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago