2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மரக்கறி வியாபாரிகள் விரட்டியடிப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், என்.ராஜ்

 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் கோவிலுக்கு அருகில், இன்று (31), பயணத் தடையை மீறி  மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரால் விரட்டப்பட்டனர்.

அவ்விடத்தில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி வியாபாரத்தில் ஈடுபட்டதால், அங்கு பொதுமக்கள் ஒன்றுகூடி, மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த கோப்பாய்  பொலிஸார், அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை   அங்கிருந்து விரட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .