2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மர்மப்பொருள் வெடித்ததில் இரும்பு வியாபாரி காயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் சந்திக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த நபரொருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த பத்மராஜா பத்மஜெகன் (வயது 28) என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர், இரும்பு விற்பனையாளர் என்றும் அவர் சேகரித்த இரும்புகளை வீட்டில் வைத்து பிரித்துக்கொண்டிருக்கும் போது, அதனுள் இருந்த வெடிபொருள் வெடித்ததனாலேயே அவர் காயமடைந்தார் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .