Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் – கோண்டாவில், ஆசிமட அரசடி விநாயகர் கோவிலுக்கு முன்பாக இருந்த பழமை வாய்ந்த மடம், நேற்று (02) இரவு இடிந்து விழுந்துள்ளது.
நேற்று (02) இரவு பெய்த அடைமழையின் காரணமாகவே, குறித்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
குறித்த மடமானது, பல வருடங்களுக்கு முன்னர், கோவிலுக்கு வருபவர்கள், அப்பகுதியில் உள்ளவர்கள், வீதியால் சென்று வருபவர்கள் ஆகியோர் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த மடத்தை கோவில் நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும், கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால், அம்மடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த மடத்தை மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்போவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago