Niroshini / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனுக்கு எதிராக, இன்று (28) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாநகர சபை முன்றலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்களால், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாநகர சபை அமர்வு இடம்பெற்ற போது, மேயரின் ; செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, 'மேயரின் அராஜகம் ஒழிக', 'சபையின் மாண்பை காப்பாற்று', 'வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே' போன்ற கோஷங்கள், மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago