2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மேயர்களின் வருடாந்த மாநாடு

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், ​டி.விஜித்தா

இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள அனைத்து மாநகர சபைகளின் மேயர்களின் வருடாந்த மாநாடு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில், இன்று (04) நடைபெற்றது.

பிரதம நிறைவேற்று அதிகாரி  திருமதி கேமந்தி குனசேகர நெறிப்படுத்தலில், யாழ். மாநகர மமேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இலங்கையில் உள்ள 24 மாநகர சபைகளின் மேயர்களில், 18 மாநகர சபை மேயர்கள் கலந்துகொண்டனர்.

கொழும்பு, அக்கரைப்பற்று, நுவரெலியா, கல்முனை, பண்டாரவளை மற்றும்  தெஹிவளை-கல்கிசை ஆகிய மாநகர சபைகளின் முதல்வர்கள், குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .