2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழ். விபத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன் 

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் விபத்துக்குள்ளான நபர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

 45 வயதுடைய குறித்த நபர், நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் அலைந்து திரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பஸ்ஸில் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளார் .

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் எதுவும் அறியப்படவில்லை . சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்பாணம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .