Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தற்போது யாழ்பாணத்தில் நிலவி வரும் மணல் தட்டுப்பாடு காரணமாக, இம்முறை நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுக்கு சிறிதளவான மணலே கொட்டப்பட்டுள்ளது. இதனால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அங்க பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் காயங்களுக்குள்ளாகி வருகின்றனர். ஆலயச்சூழலுக்கு போதியளவு மணல் கொட்டாமையால், பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் போது, முழங்கை, வயிறு மற்றும் முழங்கால் பகுதியில் காயம் ஏற்படுகின்றது.
நல்லூர் ஆலய உற்சவ காலத்தில், அதிகளவான பக்தர்கள் தினந்தோறும் அங்க பிரதட்சணம் மேற்கொள்வதால், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யாழ். மாநகர சபையால் மணல் கொட்டப்படுவது வழக்கமாகும்.
வழமையாக 250 கியூப் மணலை மாநகர சபை கொட்டிவந்த நிலையில், தற்போது யாழ்;ப்பாணத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு காரணமாக மாநகர சபை 50 கியூப் மணலை மாத்திரம் கொட்டியுள்ளது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக மாகாண சபையால் கூறப்பட்ட போதும், மேலதிக மணல் கொட்டுவதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago